Tuesday, July 2, 2024
Home » விஜயலட்சமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம்… 2வது முறையாக சம்மன் கொடுத்த போலீஸ்.. சீமான் வாங்க மறுப்பு!

விஜயலட்சமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம்… 2வது முறையாக சம்மன் கொடுத்த போலீஸ்.. சீமான் வாங்க மறுப்பு!

by Porselvi

சென்னை: நடிகை விஜயலட்சமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக, வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த மாதம் 28ம் தேதி இயக்குநர் சீமான் மீது இரண்டாவது முறையாக பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், இயக்குநர் சீமான் இயக்கத்தில் ‘வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தில் இயக்குநர் சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு, மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலிரவு நடந்ததாக விஜயலட்சுமி தெரிவித்து இருந்தார். சீமானுடன் கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக 7 முறை கருவூற்றேன். பிறகு சீமான் கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்தார். அதன் பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்.

இதுகுறித்து கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அளித்த புகாரின்படி வளசரவாக்கம் போலீசார் கடந்த 2011ம் ஆண்டு இயக்குநர் சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் இயக்குநர் சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இயக்குநர் சீமான் தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2023 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர். அதற்கு பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்ட போது, மதுரை செல்வம் என்பவர் மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி வருவதாக புகார் அளித்தார். புகாரின்படி, நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு 164 சட்டப்பிரிவின் கீழ் நடிகை விஜயலட்சுமி 3 மணி நேரம் தான் சீமானுடன் வாழ்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்தார். அதைதொடர்ந்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விளக்கம் கேட்டு இயக்குநர் சீமான் நேரில் ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அப்போது வழக்கு ஒன்றில் ஆஜராக உள்ளதால் விசாரணைக்கு 12ம் தேதி நேரில் ஆஜராவதாக சீமான் போலீசாருக்கு விளக்கம் அளித்திருந்தார். ஆனால் 12ம் தேதி இயக்குநர் சீமான் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி முன்பு நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் சங்கர் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் கையில் மனுவுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.  அப்போது “சீமான் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக வெளியூரில் உள்ளார்.இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே மற்றொரு நாள் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்,”என்று வழக்கறிஞர்கள் ஒரு மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு 2-வது முறையாக சம்மன் அனுப்ப போலீசார் சென்றனர். அப்போது சீமான் தரப்பில் சம்மனை வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என வீடியோ பதில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi