அதன்படி, இந்தாண்டு ‘சாகர் கவாச் ஆபரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் நேற்று தொடங்கியது.திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியான பழவேற்காடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், சந்தேகிக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், தமிழக எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரிக் கரையோர கிராமங்களில் தொடங்கி காட்டுப்பள்ளி, எண்ணூர் முகத்துவாரம் வரை இந்த ஒத்திகை நடந்தது. இதில், மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட போலீசாரும், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட போலீசாரும், தமிழக கடலோர காவல் படையைச் சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டனர்.