சென்னை: பாதுகாப்புக்காக பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வே துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொல்லப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.