அவர் அக்கரப்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதாக தெரிய வந்தது. விசாரணையில் அவர் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 340 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.