பெரியபாளையம் அருகே கஞ்சா விற்ற செக்யூரிட்டி கைது

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்து கொண்டிருந்த ரவாக்பாத்(38) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர் அக்கரப்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதாக தெரிய வந்தது. விசாரணையில் அவர் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 340 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!