டெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்திற்கு புதிதாக பாதுகாவலர்கள் நியமிக்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த பாஜக எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.