சென்னை: மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை களங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள் என்று அவர் கூறினார்.