இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற முதல் தொகுதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி ஆகும். பானை சின்னம், டிவி சின்னத்தில் நிற்கின்றோம் என எஸ்டிபிஐ கட்சியினர் கூறியிருந்தால் வணக்கம் போட்டு வாங்கன்னு சொல்லிட்டு, கண்ணன் அல்லது எனது மகனை போட்டியிட வைத்திருப்போம். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறேன் என முகமது முபாரக் கூறியதால் நாங்கள் போட்டியிட வாய்ப்பு அளித்தோம். எஸ்டிபிஐ கட்சியை திண்டுக்கல்லில் நிற்க வைத்ததின் ரகசியம் இதுதான்.
‘ஆமாப்பா… விடிய விடிய தூக்கம் இல்லாம போதையில் உளறுறேன்’
திண்டுக்கல் சீனிவாசன் பேசி முடித்தவுடன், ‘‘மார்ச் 26ம் தேதி காலை நத்தம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும்’’ என்றார். அப்போது பழநியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், ‘‘பழநியில் மார்ச் 26ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்றீர்கள், தற்போது மாற்றி கூறுகிறீர்கள்’’ என்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘ஆமாம்பா… போதையில் உளறுகிறேன். விடிய விடிய தூக்கம் இல்லாமல் போதையில் உளறுகிறேன்’’ என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பு ஒலி எழுந்தது.