சென்னை: தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தியடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும் நடைமுறை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.