அதுபோல் மண்டபம் அருகே வேதாளை சிங்கிவலைகுச்சு கடலோரப்பகுதியில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது 200 கிலோ எடையுள்ள 30 வயது ஆண் கடல் ஆமை இறந்த நிலையில், உடலில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும். ஆமை அழுகிய நிலையில் இருந்ததால், எப்போது அடிபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அப்பகுதியில் மணலில் குழி தோண்டி புதைத்தனர்.