குமரி: கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அலைகள் பல அடி உயரத்துடனும் ஆக்ரோஷத்துடன் கடலில் உள்ள பாறைகளில் மோதி வருகின்றன. சன் ரைஸ் பாயின்ட், திரிவேணி சங்கமம், படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இறங்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறிய சுற்றுலா பயணிகளை கடலோர பாதுகாப்பு போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.