சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி செப்.29-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி செப்.29-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயலட்சுமி அளித்த புகாரின் அடைப்படையில் 2011-ல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். 2011-ல் அளித்த புகாரை வாபஸ் பெற்ற நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது தொடர்பாக போலீஸ் தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்தது. வழக்கின் தன்மை குறித்து ஆராய நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை