ஆலந்தூர்: சொத்துவரி செலுத்தாத 2 தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரில் 2 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய ரூ60 லட்சம் வரி பாக்கியை செலுத்தத்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்களுடன் இன்று காலை வந்தனர். இதன்பின்னர் 2 தியேட்டர்களுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். தியேட்டருக்கு மின் இணைப்பையும் துண்டித்தனர்.