மேலும், மீன்பிடி விசைப்படகு மூழ்கியதில் காணாமல் போன ராமச்சந்திரன் (74) என்பவரை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் கடந்த 5 நாட்காளாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. எனவே, மாயமான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைபோல் தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் கிராமத்தில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை சீரமைப்புப்பணியின்போது மண் சரிந்து உயிரிழந்த ஜெயநாராயணமூர்த்தி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.