விசாரணையில் மணல் கடத்தலை பிடிக்க சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறினர். அதற்கு, ‘‘அரிவாளுடன் ஏன் ஊருக்குள் வந்தீர்கள்’’ என கிராம மக்கள் கேட்டனர். மேலும் போலீசாரின் அடையாள அட்டைகளை வாங்கியும் பார்த்தனர். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.