Monday, September 9, 2024
Home » விருச்சிக ராசி வெற்றி ராசி

விருச்சிக ராசி வெற்றி ராசி

by Porselvi

அக்டோபர் 24 முதல் நவம்பர் 21க்குள் பிறந்தவர்கள் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் என்று மேலை நாட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கே கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்கு உரியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஏனெனில் இந்த மாதத்தில் சூரிய பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்வதாக நம்பப்படுகிறது. மேனாட்டுப் கிரேக்கப் புராணங்களில் ஒரியன் என்ற வேடன் தன்னால் வீழ்த்த முடியாத விலங்குகளே பூமியில் இல்லை என்று ஆணவமாகப் பேசிய பித்து பூமி தேவி ஸ்கார்பியோ என்ற அசுரனிடம் ஒரியனைக் கொல்லும்படி வேண்டினாள். அந்த தேள் அசிரன் கொத்தியதால் ஒரியன் இறந்தான். இக்கதை ஒரியன் நட்சத்திரம் வானத்தில் மறையும் நேரத்தில் அல்லது மறைந்த பின்பு ஸ்கார்பியோ வானத்தில் தோன்றுவதைப் பார்த்தும். சில சமயம் ஒரியனை ஸ்கார்பியோ என்ற நட்சத்திரக் கூட்டம் விரட்டுவது போலத் தோன்றுவதை பார்த்தும் படைக்கப்பட்ட தொன்மக் கதை ஆகும். தொன்மம் என்ற நிஜத்துக்கு காரணம் கூறும் கற்பனைக் கதை ஆகும்.

வெற்றி வீரர்கள்

விருச்சிக ராசி அல்லது விருச்சிக லக்னத்தை சேர்ந்தவர்கள் பார்க்க அமைதியாக கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவர்களாகத் தோன்றினாலும் பகை என்று வந்துவிட்டால் வன்மம் வைத்து மறைந்து நின்று போராடி ஜெயித்து விடுவார்கள். அதாவது முகத்துக்கு நேரே மோதாமல் வாலால் கொட்டும் தேள் போல பின் இருந்து தாக்கி வெற்றி பெறுவர். இந்த ராசியில் சந்திரன் நீசம் ஆவதால் விருச்சிக ராசி-லக்னத்தை சேர்ந்தவர்கள் மன அழுத்தம், மனச் சஞ்சலம், மனக்குழப்பம், அச்சம் தயக்கம், காலதாமதம் போன்ற குணங்களை உடையவர்கள். இவர்களின் ஜாதகத்தில் சந்திரனுக்கு சுபர் பார்வை கிடைத்தோ அல்லது மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தாலோ மனக்கலக்கம் என்பது நீங்கும்.

அலை பாயும் உள்ளம்

விருச்சிகம் என்பது தண்ணீர் ராசியாக இருப்பதாலும் இவர்கள் மனம் எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருக்கும், சட் என்று ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். செய்வோமா வேண்டாமா போவோமா இருப்போமா என்று முடிவெடுக்க இயலாமல் திணறுவார்கள். ஆனால் படு நிதானமாக ஆலோசித்து இறுதியில் நல்ல முடிவெடுப்பார்கள். ஒவ்வொன்றையும் ஒரு முறைக்கு மூன்று முறை சோதித்துப் பார்த்த பிறகு ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். பரிசோதனை செய்து பார்ப்பதில் கெட்டிக்காரர்கள். காத்திருந்து வெற்றி பெறுவதில் கெட்டிக்காரர்கள். இதே செவ்வாய் ராசிக்காரரான மேஷராசியினர் யோசிக்காமல் முடிவெடுப்பர். முன்கோபிகள். சட்டென்று கை நீட்டி அடித்துவிடுவர். ஆனால் அதே செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் பல வருடங்கள் தங்களின் எதிரியை வெல்வதற்கு ரகசியத் திட்டமிட்டு அவர்கள் கூடவே இருந்து தக்க நேரம் பார்த்து பிடரியில் ஒரே போடாக போட்டு விடுவார்கள்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை

விருச்சிக லக்கினம்- ராசியினர் வசியத்திலும் பாலுறவிலும் கைதேர்ந்தவர்கள். வாழ்க்கைத் துணையை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்வர். இவர்களுக்கு நல்ல மனைவி அல்லது நல்ல கணவன் அமையும். வெகு நாட்கள் ஆலோசித்து தம் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பார்கள். பின்பு அவர்களோடு ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்கள் ஒரு ஆணையோ பெண்ணையோ விரும்பினால் பொறுமையாக இருந்து அவர்களைத் தொட்டு பழகி தொடர்ந்து வந்து ‘நீ இல்லாமல் நான் இல்லை’ என்று அவர்களைச் சொல்ல வைத்து, காக்க வைத்து கல்யாணம் செய்து கொள்வார்கள். தான் நேசிக்கும் நபரை தொட்டுத் தொட்டுப் பழகி வீழ்த்தி விடுவர்.

அதிகார வேட்கை

போர்க்குணம் படைத்த கிரகம் செவ்வாய் ஆகும். இங்கு சந்திரன் நீசம் பெறுவதால் இவர்களின் மனதில் துணிவிருக்காது. ஆனால் செயலில் வேகம் இருக்கும். தண்டனை கொடுக்கும் அதிகாரம், கெட்டவர்களை அடித்து உதைப்பது போன்ற வேலைகளில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம். ஆனால் ரவுடிகளாக இருக்க மாட்டார்கள் ஏனெனில் மனதிற்குள் ஓர் அச்சம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். எனவே அதிகாரம் உள்ள பதவிகளில் இருந்து ஆணவமாக நடந்து கொள்வர். மேனாட்டில் ஜோதிட அறிஞர்கள் இந்த ராசிக்குரிய கிரகமாக ஆக்க சக்தியும் அழிவு சக்தியும் கொண்ட புளூட்டோவை குறிப்பிடுவர். ரகசிய காவல் துறையினர் போல் ரகசியமாகத் திட்டம் தீட்டி ரவுடிகளை என்கவுண்டர் செய்வர். பிறர் அறியாத வகையில் கொள்ளைக் கூட்டத்துக்குள் புகுந்து அவர்களோடு பழகி மொத்தக் கூட்டத்தையும் பிடித்து கொடுப்பார்கள். முடிவில் எப்போதும் வெற்றி காண்பார்கள்.

பார்வை ஒன்றே போதுமே

விருச்சிக ராசிக்காரர்கள் தான் இருக்கும் இடத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் தனது அன்பினாலும் அமைதியாலும் கவர்ந்துவிடுவர். (லியோனோட டீ காப்ரியோ, ஜூலியா ராபர்ட், கேண்டால் ஜென்னர் போன்றோர் இந்த ராசி-லக்னத்தில் பிறந்தவர்கள்) இவர்கள் பார்வை தீட்சண்யம் உடையவர்கள். காவல்துறை அதிகாரிகளாக வர முழுத் தகுதி படைத்தவர்கள். இவர்கள் தங்கள் பார்வையாலேயே குற்றவாளியிடம் உண்மையைக் கறந்து விடுவர். தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பார்வையிலேயே கட்டுப்படுத்தி விடுவர். இவர்கள் பார்வை வசியம் கொண்டவர்கள்.

கடமை வீரர்

விருச்சிக ராசிக்காரர்கள் தம் உயிரைத் துச்சமென மதித்து வீரதீரச் செயல்களில் இறங்குவர். இவர் ரகசியப் போலீஸ் அதிகாரியாக இருப்பார். ஆனால் வெளியே பார்த்தால் ஏதோ ஒரு ஆபீஸ் கிளார்க் மாதிரி நடந்து செல்வார். இவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் ரகசிய வாழ்க்கையாக இருக்கும். ஒருவர் சும்மா வீட்டில் இருப்பார். அண்டை வீட்டார் இவர் டில்லியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பர். இவரும் அக்கருத்து உண்மை போலவே நடந்து கொள்வார். விருச்சிக ராசியினர் துணிச்சலான போராளிகள். தங்கள் இயக்கத்திற்காக / மதம்/ சாதிக்காக/ நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள். பலரோடு கலந்து பழகும் இயல்பு இவர்களுக்கு இருக்காது. தங்கள் விஷயங்கள் பிறருக்கு தெரியக்கூடாது என்பதால் கூடுமானவரை தனித்து இருக்கவே விரும்புவார்கள்.

கூட்டாளி ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் நீர் ராசிக்காரர் களாக இருப்பதனால் மற்ற நீர் ராசிக்காரர் களான கடகம் மற்றும் மீனத்துடன் இணக்கமாக இருப்பர். வாழ்க்கைத் துணை கடகம் அல்லது மீன ராசிக்காரர்கள் ஆக இருந்தால் அவர்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள். இவருடைய குணாதிசயங்களை கடக மீன ராசிக்காரர்கள் மட்டுமே புரிந்து கொண்டு இவர்களோடு சந்தோஷமாக இணைந்து செல்வார்கள். அடுத்து மண் ராசியான ரிஷபம், கன்னி, மகரம் ராசியினரும் இவர்களோடு ஒத்துப்போக முடியும். அவர்கள் மூவரும் இவர்கள் முன்னிலையில் அடங்கிப் போவார்கள். விருச்சிகராசி ஆணுடன் கன்னி ராசிப் பெண் அல்லது மகர ராசி பெண் மனம் ஒப்பி குடும்பம் நடத்துவாள்.

 

You may also like

Leave a Comment

15 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi