அதே விமானம் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1:42 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது தினசரி விமானமாக இயக்கப்படுகிறது. இதனால் சென்னை – சிங்கப்பூர் விமானங்களின் எண்ணிக்கை 12லிருந்து 14 ஆக அதிகரித்துள்ளது. ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர் – சென்னை – சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கியது. சென்னைக்கு மட்டும் விமான சேவை தொடங்காமல் இருந்தது. தற்போது, சுமார் மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் – சென்னை இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது.