அனைத்து விஞ்ஞானிகளும் வெளியிட்ட குறைந்தபட்சம் 5 ஆய்வு கட்டுரைகள், புலம் மற்றும் துணை புலம் சார்ந்த சதவீதங்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கணிதவியல் துறை பி.பாலசுப்பிரமணியம், வேதியியல் துறை எஸ்.மீனாட்சி, இயற்பியல் துறை கே.மாரிமுத்து ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தற்போது 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.