கோவை: கோவையில் பாஜகவின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மோடியின் ரோடு ஷோவுக்காக பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் வலிவுறுத்தியுள்ளனர்.