இந்தபேச்சு வார்த்தையில் 243 அரசாணையின் பாதிப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டதில், ஆசிரியர்கள் தரப்பில் உள்ள நியாயமான கோரிக்கைளில் சிலவற்றை விரைவில் நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவித்தபடி போராட்டம் தொடரும் என்று டிட்டோஜாக் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் தியாகராஜன் உள்பட 12 சங்கங்களின் பொருளாளர்கள் இன்றைய போராட்டத்தை தலைமையேற்று நடத்துகின்றனர்.