பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது, விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார், துணை தலைமை ஆசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயலூர் கோபி, திருவெள்ளைவாயல் முத்து, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு அப்பள்ளியில் கல்வி பயிலும் 108 மாணவ மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருப்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற திருக்குறள் வாசிப்பு போட்டியில் திருவெள்ளைவாயல் பள்ளியில் கல்வி பயின்று போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சக்திவேல், புனிதா, தர்ஷன், உள்ளிட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளையும் வழங்கி கவுரவப்படுத்தினார். இதில் அத்திப்பட்டு புருஷோத்தமன், திருவெள்ளைவாயல் வினோத், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.