புழல்: புழல் அருகே, நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான். புழல், காவாங்கரை திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணிகண்டன் (14). இச்சிறுவன், புழல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தனது நண்பர்களுடன் புழல் கண்ணப்ப சாமி நகரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பம்பிங் ஸ்டேஷனில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். சிறுவன் சேற்றில் சிக்கி, உயிருக்குப் போராடினான்.
சிறுவன் சிறிதுநேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.