அப்போது 2500 மாணவர்கள் இருந்தோம். கலகலப்பாக இருக்கும் இந்த பள்ளிக்கூடம், இங்கு தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த பள்ளிக்கூடம் தான் என்னை தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பதவிக்கு அழைத்து சென்றது. இந்த பள்ளிக்கூடத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இங்கு நான் வருவேன். பணியில் இருந்து ஓய்வுபெறக்கூடிய இந்த வேளையிலும் இந்த பள்ளிக்கூடத்தை ஒருமுறை நான் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையில் இங்கு வந்துள்ளேன். தாய் மண்ணே வணக்கம். அப்படி சொல்வது போன்று எனது பள்ளிக்கு வணக்கம்’ என்று தெரிவித்துள்ளார். டிஜிபியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.