லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல் தளத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். காலை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துத்துச் செல்வதற்காக முதல் மாடி பால்கனியில் மாணவர்கள் கூடியபோது, இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.