Saturday, September 28, 2024
Home » பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஜெய்ப்பூரிலிருந்து காலணிகள் வந்திறங்கின: இன்று முதல் மாவட்டம் முழுவதும் விநியோகம்

பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஜெய்ப்பூரிலிருந்து காலணிகள் வந்திறங்கின: இன்று முதல் மாவட்டம் முழுவதும் விநியோகம்

by MuthuKumar
Published: Last Updated on

திருவாரூர்: பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு வழங்குவதற்காக கண்டெய்னர் லாரியில் காலணிகள் வந்திறங்கின. ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இன்று முதல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடியபயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி-வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணிதஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத்திட்டம், வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவியருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் சத்தான உணவு உண்டு வருவதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பெண்கள் தங்களது வாழ்கையில் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மாணவிகளின் மேற்படிப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையின் பேரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குவதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாணவிகளை போன்று மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்துவது மட்டுமின்றி அவைகள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் திமுக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதையொட்டி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்குரிய பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, நடப்பா ண்டில் வரும் 6ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதைமுன்னிட்டு மாணவர்களுக்கான புத்தகங்கள் திருவாரூர் அருகே காட்டூரில் இருந்து வரும் புத்தக மையத்திலிருந்து மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலணியும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு ஷூவும் வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக நேற்று ஜெய்பூரிலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு கண்டெய்னர் லாரி மூலம் வரபெற்ற காலணிகள் அங்கு இறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து இன்று மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

நடப்பாண்டில் வரும் 6ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதைமுன்னிட்டு மாணவர்களுக்கான புத்தகங்கள் திருவாரூர் அருகே காட்டூரில் இருந்து வரும் புத்தக மையத்திலிருந்து மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பள்ளிக ளுக்கு புத்தகங்கள் அனு ப்பும் பணி நடைபெற்று வருகின்றன.

You may also like

Leave a Comment

twenty − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi