கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும் உயர்வு. தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத்திட்டம் (Chief Minister’s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சிப் படிப்பு(Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.