பேரறிஞர் அண்ணாவை பற்றி அவதூறு பேசினால் நாக்கு துண்டாகும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு எச்சரிக்கை

மதுரை: பேரறிஞர் அண்ணாவை பற்றி தவறாக பேசுபவர்களின் நாக்கை துண்டாக்கும் கொள்கைமற்றவர்கள் மறவர்கள் இங்குள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் அண்ணாமலைக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்திய அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; எம்.ஜி.ஆர். பெயரை கூட மறந்துவிடுவோம் ஆனால், அண்ணாவின் பெயரை மறக்க முடியாது என குறிப்பிட்டார். அண்ணாவை பற்றி தவறாக பேசினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு அவர்களின் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்களில் உள்ளதாக அண்ணாமலைக்கு ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி ஏற்கனவே அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். பின் தான் அவ்வாறு பேசவில்லை எனவும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த ஜெயக்குமார் மறைந்த தலைவர்களை விமர்சிப்பதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தார். அவரை தொடர்ந்து செல்லூர் ராஜும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது