இதை நிவர்த்தி செய்ய, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கென பிரத்யேகமாக துறைத் தேர்வுகள் மூலம் நேரடி ஆட்சேர்ப்பு நடத்தி, நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்களுக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதி செய்துள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.