இந்த கடுமையான மனநிலையை குறைப்பதற்கான பயிற்சிகளும், சந்திப்புகளும்தான் கைண்டென்ஸ் பவுண்டேஷன் ஏராளமான நடவடிக்கைகள் மூலமா செய்கிறோம். அதாவது இயற்கையான சுழல்களில் நேரம் செலவிடுதல், யோகா, விளையாட்டுகள், எதையும் பொறுமையாக , சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் பயிற்சிகள், விலங்குகள், பறவைகள் மூலம் தெரபிகள் என இருக்கும் குணநலன்களில் இன்னும் நல்ல எண்ணங்களையும், நன்மை தரும் நடவடிக்கைகளையும் புகுத்தும் பயிற்சிகள்தான் எங்களுடைய கைண்ட்னெஸ் குழு செய்கிறது. நீங்களே இந்த பயிற்சிகளை உங்களுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தாருடன் எதையும் இணக்கமாக சொல்வது, அவர்களுடன் இனிமையான நேரம் செலவிடுவது. அது நடந்தாலும் நம் குடும்பம், நம் நண்பர்கள் என நினைத்தாலே எப்படியான கோபமும், வன்மமும் தணிந்து விடும்‘ யாருக்கெல்லாம் பயிற்சிகள் கொடுக்கிறீர்கள். ‘நிறைய பள்ளிகளில் சென்று பயிற்சிகள் கொடுக்கிறோம். குழந்தைகளில் இருந்தே இந்த நல்ல எண்ணங்களையும், எதையும் நேர்மறையாக பார்க்கும் முறைகளையும் கற்றுக்கொடுக்கிறோம். அடுத்து வயதான மக்கள் இவர்களுக்கும் இந்தப் பயிற்சி தேவை. காரணம் வயது மூப்பு, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக அவர்களிடம் உள்ளார்ந்த ஒரு கடுமையும், வெறுப்பும் உருவாகும். வீட்டில் இருப்போரிடம் கூட எரிந்து விழும் சில வயதானவர்களைக் காணலாம். இதையெல்லாம் கூட சரி செய்வதுதான் எங்களுடைய குறிக்கோள்‘ பெண்களுக்கு எவ்விதமான கைண்ட்னெஸ் தேவை மேலும் தொடர்ந்தார் மஹிமா.
‘நோ… இந்த வார்த்தையை சொல்ல யோசிக்கவே வேண்டாம். வீட்டில், வேலையில் என எங்கும் நோ சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கலாம் ‘நல்லதே நினையுங்கள்‘ எனக் கூறிவிட்டு ‘நோ‘ சொல்லச் சொல்கிறீர்களே என்று. பல பெண்கள் தனக்கு பிடிக்காத செயல்களை, விஷயங்களுக்கு நோ எனச் சொல்ல தயங்குகிறார்கள். இந்த நோ உங்கள் நன்மைக்கான பாசிட்டிவ் வார்த்தை. பிடிக்காத ஒன்றை ஏற்றுக்கொள்வதை விட தைரியமாக நோ சொல்வதும் ஒரு பாசிட்டிவ் நடவடிக்கைதான். ஒருவேளை உங்களின் கணவர், கணவர் வீட்டார், வேலை செய்யும் இடம், உயரதிகாரிகள் இங்கே நோ சொல்ல முடியவில்லை எனில் அதை எப்படி இன்முகத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களோ அப்படிச் சொல்லலாம் அல்லது நாளை செய்கிறேன், எனக்கு இதில் உடன்பாடில்லை, எனக்கு இந்தப் பழக்கம் இல்லை இப்படியான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதைத் தெரியப்படுத்துவது உங்களுக்கு நன்மை தரும்’. எதிலும் எதையும் இன்முகத்துடன், அல்லது மென்மையாக அணுகுவதால் நாம் எதுவும் இழக்கப் போவதில்லை. கோபமும், கடுமையும், வன்மமும் நமக்கு என்ன பிரதிபலன் கொடுக்கப் போகிறது. எனவே எதிலும் ‘ Be Kind’.இன்முகத்துடன் சொல்கிறார் மஹிமா.
– ஷாலினி நியூட்டன்