சோபாவில் மறைத்து வைத்திருந்த 48 சவரன் நகைகள் மாயம்: துணிக்கடைக்காரர் போலீசில் புகார்

பெரம்பூர், ஜூன் 13: வியாசர்பாடியில் துணிக்கடைக்காரர் வீட்டில் 48 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. திருடு போன அந்த நகைகள் வீட்டில் உள்ள சோபாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வியாசர்பாடி கக்கன்ஜி காலனி முனிவேல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர், சர்மா நகரில் ரெடிமேட் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 48 சவரன் தங்க நகையை பையில் வைத்து, வீட்டின படுக்கை அறையில் உள்ள சோபாவில் மறைத்து வைத்திருந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் அவசர தேவைக்காக நகையை எடுக்க முயன்றபோது நகை காணாமல் போயிருந்தது. பின்னர், வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்காததால் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாரியப்பனின் உறவினர் விஜயகுமார் என்பவர் சாத்தூரில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு கடந்த 27ம் தேதி ஊருக்குச் சென்றுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி