சென்னை: திமுக உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.