அப்போது புலி வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதாகும். முக்கிய குற்றவாளியை மராட்டிய மாநில போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினரின் கோரிக்கையை ஏற்று மராட்டியத்தில் கைதானவரை சத்தியமங்கலம் புலி வேட்டை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை என்ற புகார் நீதிமன்றத்தில் உள்ளது.
புகார் தொடர்பாக முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் சிபிஐ எம்.பி. ஆகியோரை நவம்பர் 8-ம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாடு – கேரள எல்லையில் யானைகளின் இறப்பை தடுக்கும் வகையில் கூடுதல் சுரங்கப் பாதைகளை அமைக்கும் வகையில் இருமாநில வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.