விழாவில் பங்கேற்க வாகனங்களில் வரும் பக்தர்களை வனப்பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் திருவிழா நடைபெறும் 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை காராச்சிக்கொரை வன சோதனை சாவடியில் திருவிழாவிற்கு செல்லும் வாகனங்களின் ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்ததுடன், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிட்டு அனுமதி வழங்கினர். மேலும் இப்பகுதியில், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.