இதனை அங்கு கூடியிருந்த பெண்கள் கைதட்டி ஆர்வத்துடன் ரசித்தனர். பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடி விட்டு வீரேஸ்வரரை வழிபட்டனர். அதை தொடர்ந்து பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலத்தில் இட்டனர். அவ்வாறு செய்தால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.