வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் விளையாடியபோது அது வேறு விதமான சூழலாக இருந்தது. தற்போது இந்தியாவில் விளையாடுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலாக இருக்கிறது. நான் எல்லா இடங்களிலும் என் விளையாட்டை ரசித்துதான் விளையாடுகிறேன். மேலும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கிடைக்கும் எல்லா வாய்ப்பும் பெருமையானது. ஒரு கட்டத்தில் ஜோ ரூட் பந்தை வீசப் போகிறார் என்பது எனக்கு தெரியும். அவர் முதலில் வந்து பந்து வீசும்போது நான் அதற்கு தயாராக இருந்தேன். ஆனால் நான் முன்பே சொன்னது போல என்னால் முடிந்ததை நினைத்ததை செய்திருக்கிறேன். நான் சில சமயங்களில் தவறு செய்து வெளியேறலாம். ஆனால் நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தவறுகளில் இருந்து நான் கற்றுக் கொள்வேன்” என்றார்.