சசி தரூர் மீது போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரான சசி தரூர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் கிறிஸ்தவ அமைப்பினருக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து ராஜீவ் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திலும், கேரள டிஜிபியிடமும் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், சசி தரூருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே சசி தரூர் மீதான புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு