முதல்வர் பதவியைப் பெற்ற பின்பு சசிகலா, டிடிவியை ஏமாற்றியவர் எடப்பாடி: ஓபிஎஸ் பேச்சு

பெரியகுளம்: சசிகலா, டிடிவி.தினகரனிடம் முதல்வர் பதவியைப் பெற்று, பின்பு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். திருச்சியில் வரும் 24ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து வருவது குறித்த ஆலோசனைக்கூட்டம், ேதனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக, கிளக் கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஓபிஎஸ் பேசியதாவது:

திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள், அவரவர் பகுதியில் இருந்து திரளான தொண்டர்களை கொண்டு வர வேண்டும். சசிகலா மற்றும் டிடிவி.தினகரனிடம் முதல்வர் பதவியைப் பெற்று, பின்பு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதையே சசிகலா மற்றும் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டை பெற்று தந்தவர் பிரதமர் மோடி. உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான், நான் அல்ல. மாவட்ட செயலாளர் சையதுகான், டிடிவி.தினகரன் சந்திப்பை நான் இதுவரையிலும் தடுக்கவில்லை. என்னையும் டிடிவி.தினகரனையும் சமாதானப்படுத்தி சையதுகான் ஒன்றிணைத்து விடுவார். இவ்வாறு பேசினார்.

Related posts

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை இன்று வெளியீடு

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் மூடப்பட்டன

தேனியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது