சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவின் புதிய இல்ல கிரகப்பிரவேசம் இன்று காலை நடைபெற்றது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா 3 மாடிகளுடன் கூடிய பங்களா கட்டியுள்ளார். சசிகலாவின் புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக வேதா இல்ல வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்