சென்னை: சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்று ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டியளித்தார். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம். உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா என்று அவர் கூறினார்.