இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். அங்கு சனந்த் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையை சரத்பவார் மற்றும் அதானி இணைந்து தொடங்கினர். அைத தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள அதானியின் வீடு மற்றும் அலுவலகத்திற்குச் சரத்பவார் சென்றார். மேலும் தனது எக்ஸ் பதிவில் இதுதொடர்பான படங்களையும் சரத்பவார் பதிவிட்டு இருப்பது இந்தியா கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.