சென்னை: அவதூறு வழக்கில் உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மும்பை நீதிமன்றம் 15 நாள் சிறை தண்டனை விதித்தது. பா.ஜ.க.வைச் சேர்ந்த கிரிட் சோமையாவின் மனைவி மேதா தொடர்ந்த அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை மசகான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சஞ்சய் ராவத்துக்கு சிறை தண்டனை விதித்தது.