தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்த பின்பும், மற்ற பயணிகளுக்கும் தொடர்ந்து சாண்ட்விச் விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது என்றும், சாண்ட்விச்சை வழங்கும் உணவு விநியோக நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.