மணப்பாறை: மணப்பாறை அருகே சிலம்பம்பட்டியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி பெருமாள் (50) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ஆடுகளை பட்டியில் அடைப்பதற்காக விவசாயி பெருமாள், தோட்டத்துக்கு சென்றபோது பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது, தோட்டத்தின் நடுவே சென்ற மின்கம்பியில் தென்னை மட்டை சாய்ந்ததில் மின்கம்பி அறுந்து பெருமாள் மீது விழுந்தது.