அதீத காய்ச்சலால் 72 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. இந்த நோய்க்கு பிரத்யேக சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்பதால் நோய் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் துணை மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்டறிந்து, அதுபற்றி அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பவும் நோய் குறித்து பொது மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல பொது மக்களும் தங்களை பூச்சி கடியில் இருந்து பாதுகாக்கும் விதமான ஆடைகளை அணிவதுதோடு, காலணி இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி சுமார் 45 மீட்டர் சுற்றளவில் புல், பூண்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் வீட்டை சுற்றி பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.