மீதமுள்ள 37 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் காடு போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் வேதாரண்யத்தை போன்று ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின் துணை தலைவர் முரளி தலைமையில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் முன்னிலையில் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வு அறிக்கையை விரைவில் தமிழ்நாடு அரசிடம் வழங்கவுள்ளோம் என்றும் ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த இடத்தில் ஆயத்த ஆடை பூங்காவை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.