மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஸ்ரீ பெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை, போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே புருசை கூவம் ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவு நேரங்களில் ஆற்று மணல் அள்ளப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர். அப்போது, ஒரு கும்பல் ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் ஏற்றிகொண்டிருந்தனர். போலீசை கண்டதும், கடத்தல் கும்பல் மணல் கடத்தி வந்த டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணல் கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை