சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடிங்குவோம், கண்ணை நோண்டுவோம்: ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சர்ச்சை பேச்சு

டெல்லி: சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடிங்குவோம், கண்ணை நோண்டுவோம் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக உள்பட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமது முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதன தர்மத்தை பாதுகாத்தனர்.

இப்போது சிலர் சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசுகிறார்கள். சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆவேசமாக கூறினார். மேலும், சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடிங்குவோம், கண்ணை நோண்டுவோம். சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் காட்டமாக கூறினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி வருகிறது. முன்னதாக சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்