சென்னை : சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை, உடனடியாக விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவித்துள்ளார். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பதிலளித்திருந்தது.