சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி வழக்கு

சென்னை : சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை, உடனடியாக விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவித்துள்ளார். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பதிலளித்திருந்தது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்