சாமிரெட்டி கண்டிகையில் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(43). அவருடைய மனைவி தனலட்சுமி(39) ஆகியோர் மகனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கம்ரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பு(29) என்பவர் சாமிரெட்டி கண்டிகை குடியிருப்பு பகுதி உள்ளே நுழைந்து ஆபாசமாக தம்பதியினரை பேசியும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து தனலட்சுமி தம்பதியின் கும்மிடிப்பூண்டி போலீசில் அன்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் மனு கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புவை வலை வீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்து விசாரித்தால்தான் அத்துமீறிய சம்பவத்தில் ஏன் ஈடுபட்டார் என தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்