கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(43). அவருடைய மனைவி தனலட்சுமி(39) ஆகியோர் மகனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கம்ரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பு(29) என்பவர் சாமிரெட்டி கண்டிகை குடியிருப்பு பகுதி உள்ளே நுழைந்து ஆபாசமாக தம்பதியினரை பேசியும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து தனலட்சுமி தம்பதியின் கும்மிடிப்பூண்டி போலீசில் அன்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் மனு கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புவை வலை வீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்து விசாரித்தால்தான் அத்துமீறிய சம்பவத்தில் ஏன் ஈடுபட்டார் என தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.