காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சபாநாயகர் தொடங்கி பிரதமர் மோடி வரையிலும் சரமாரியாக விமர்சித்தார். மணிப்பூர் தொடங்கி, நாடாளுமன்ற நிகழ்வை ஒளிபரப்பும் சான்சாத் டிவி வரை எதையும் விட்டுவைக்கவில்லை. சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி பேசிய விவாதத்தால் லோக்சபாவில் அனல் பறந்தது. இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்து நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை சபாநாயகர் ஓம்பிர்லா நீக்கினார்.